இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை பதிவு செய்வது தொடர்பில் வெளியான தகவல்
2021 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அல்லது அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்களை பதிவு செய்வதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின்படி, தேவையான சட்ட ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறைகளை தயாரிப்பது தொடர்பில் இந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகன பதிவு திணைக்களம் மற்றும் நிதி அமைச்சுக்கு இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனப்பதிவு
இதன்போது, மோட்டார் வாகனப் பதிவு, ஒழுங்குமுறை, சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் மற்றும் வீதிப் பாதுகாப்பு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படும் சீர்திருத்தங்கள் குறித்து கூட்டத்தின் கவனம் செலுத்தப்பட்டது என இராஜாங்க அமைச்சர் சேமசிங்க டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் பிற கார்களின் பயன்பாடு தொடர்பான காலாவதியான முறைகளுக்குப் பதிலாக புதிய முறைகளைத் தயாரிக்கும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்ட 2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதிலும் இன்று முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள், நாட்டில் இருக்கும்
போது வாகனங்களை ஓட்டுவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறையை மேலும்
வினைத்திறனாக்குவது குறித்தும் இன்று கலந்துரையாடப்பட்டது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
