வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் மற்றும் மனைவி மீது வாள்வெட்டு தாக்குதல்
வலி. கிழக்கு பிரதேச சபையின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (16.03.2023) பதிவாகியுள்ளது.
வலி. கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினரும் அவரது மனைவியும் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டதன் பின்னர் வீடு திரும்பிய போது, மூவர் பிரதேச சபையின் உறுப்பினரையும் அவரது மனைவியையும் பின்தொடர்ந்துள்ளனர்.

நகை அறுக்க முயற்சி
இந்நிலையில் பிரதேச சபையின் உறுப்பினர் வீட்டிற்கு முன்பாக வழிமறித்து பிரதேச சபையின் உறுப்பினரின் மனைவி அணிந்திருந்த தங்க நகைகளை அறுக்க முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிரதேசசபை உறுப்பினரும் மனைவியும் நகைகளை அறுப்பதை தடுக்க முற்பட்டபோது இருவர் மீதும் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வைத்தியசாலையில் அனுமதி
இதையடுத்து அங்கு திரண்டவர்கள் இருவரையும் மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri