மன்னாரில் அதிகரிக்கும் கனிய மணல் அகழ்வு: மக்கள் போராட்டம் (VIDEO)

Mannar Sri Lanka Politician Sri Lankan Peoples Crime
By Ashik Aug 24, 2022 09:06 AM GMT
Report

புதிய இணைப்பு

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனிய மண் அகழ்வு இடம்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசாலை பொது மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

 இப் போராட்டம் இன்று (24) பேசாலை நகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் கோரிக்கைகள்

மன்னாரில் அதிகரிக்கும் கனிய மணல் அகழ்வு: மக்கள் போராட்டம் (VIDEO) | Regarding Mining Of Fine Sand In Mannar

மக்களின் தொடர் எதிர்ப்புக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக கனிய மண் அகழ்வு மற்று ஆய்வு பணிகள் சட்டவிரோதமாக இடம் பெறுவதாகவும் அதே நேரம் மீன் வளம் மற்றும் கடல் வளங்களை அழிக்கும் காற்றாலை மின்செயற்திட்டத்தை மன்னார் தீவக பகுதிக்குள் மேற்கொள்ள வேண்டாம் என கோரிய மக்களினால் இவ் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மன்னாரில் அதிகரிக்கும் கனிய மணல் அகழ்வு: மக்கள் போராட்டம் (VIDEO) | Regarding Mining Of Fine Sand In Mannar

 போராட்டத்தின் பின் பொது மகஜர் ஒன்றும் பொது மக்களுக்கு வாசிக்கப்பட்டுள்ளது.


மகஜரை கையளிப்பு நடவடிக்கை

 அதனை தொடந்து பேரணியாக சென்று மன்னார் பிரதேச சபையில் மகஜரை கையளிக்க மக்கள் தீர்மானித்திருந்தனர்.

மன்னாரில் அதிகரிக்கும் கனிய மணல் அகழ்வு: மக்கள் போராட்டம் (VIDEO) | Regarding Mining Of Fine Sand In Mannar

இந்த நிலையில் மகஜரை பெற்று கொள்ள வேண்டிய தவிசாளர் பிரதேச சபையில் இல்லாத நிலையில் சிறிது நேரம் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம் பேசாலை பகுதியில் இடம் பெறும் இவ்வாறான சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் காற்றாலை செய்ற்திட்டத்திற்கு முழு பொறுப்பும் மன்னார் பிரதேச சபை தான் எனவும் மகஜரை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய மன்னார் பிரதேச சபை தவிசாளர் இஸ்ஸதீன் ஓடி ஒளிந்து விட்டதாகவும் போராட்டத்தில் ஈட்பட்ட மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். 

மன்னாரில் அதிகரிக்கும் கனிய மணல் அகழ்வு: மக்கள் போராட்டம் (VIDEO) | Regarding Mining Of Fine Sand In Mannar

தொடர்சியாக காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக பிரதேச சபைக்கு முன்பாக கேஷங்களை எழுப்பிய பொது மக்கள் பிரதேச சபை தவிசாளர் இல்லாத நிலையில் உப தவிசாளரிடமோ அல்லது செயலாளரிடமோ மகஜரை கையளிக்க விரும்பவில்லை என தெரிவித்து கலைந்து சென்றுள்ளனர். 

இப் போராட்டத்தின் போது மன்னார் போசாலை பகுதியில் கடைகள் முழுவதும் மூடப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

முதலாம் இணைப்பு

மன்னாரில் இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயுவதற்கான  கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் நேற்று(23) இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் அதிகரிக்கும் கனிய மணல் அகழ்வு: மக்கள் போராட்டம் (VIDEO) | Regarding Mining Of Fine Sand In Mannar

விசேட கலந்துரையாடல்

கலந்துரையாடலின் போது, மன்னார் மாவட்டத்தில் மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொடர்ச்சியாக கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. 

இதன்போது மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் கனிய மணல் அகழ்வு மற்றும், காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் அதிகரிக்கும் கனிய மணல் அகழ்வு: மக்கள் போராட்டம் (VIDEO) | Regarding Mining Of Fine Sand In Mannar

விழிப்புணர்வு போராட்டம்

குறித்த விடயங்கள் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை(29) மாவட்ட ரீதியில் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு, மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ரீதியாக விழிப்புணர்வு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மன்னாரில் இடம் பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும், காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படாது விட்டால் தொடர்ச்சியாக எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் அதிகரிக்கும் கனிய மணல் அகழ்வு: மக்கள் போராட்டம் (VIDEO) | Regarding Mining Of Fine Sand In Mannar

இக்கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் இவ்விடயம் குறித்து மௌனம் காத்து வருகின்றனர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொறியியலாளர் சங்க பிரதிநிதிகள், கடற்தொழில் அமைப்பு மற்றும் மத தலைவர்கள் உட்பட பலர் இக் கலந்துரையாடலில் பங்குப்பற்றியுள்ளனர். 

GalleryGalleryGalleryGalleryGallery
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US