பிரித்தானியாவிற்கு ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட 126 அகதிகள்
பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமான முறையில் ஆங்கில கால்வாய் ஊடாக பயணம் செய்த 126 அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, Pas-de-Calais கடற்கரையில் இருந்து இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் மூன்று தற்காலிக படகுகளில் மிகவும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முதலாவது படகு Dunkerque இல் இருந்து புறப்பட்டுள்ளதுடன், இதில் ஆறு பெண்கள், இரண்டு சிறுவர்கள் மற்றும் இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மொத்தம் 43 பேர் பயணித்துள்ள நிலையில், இரண்டாவது படகில் 43 பேரும், மூன்றாவது படகில் 40 பேரும் என மொத்தமாக 126 பேர் மொத்தமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வருடத்தில் மாத்திரம் 16 ஆயிரம் பேர் பிரித்தானியா நோக்கி படகில் பயணித்துள்ளனர் என பிராந்திய கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam