பிரித்தானியாவிற்கு ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட 126 அகதிகள்
பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமான முறையில் ஆங்கில கால்வாய் ஊடாக பயணம் செய்த 126 அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, Pas-de-Calais கடற்கரையில் இருந்து இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் மூன்று தற்காலிக படகுகளில் மிகவும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முதலாவது படகு Dunkerque இல் இருந்து புறப்பட்டுள்ளதுடன், இதில் ஆறு பெண்கள், இரண்டு சிறுவர்கள் மற்றும் இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மொத்தம் 43 பேர் பயணித்துள்ள நிலையில், இரண்டாவது படகில் 43 பேரும், மூன்றாவது படகில் 40 பேரும் என மொத்தமாக 126 பேர் மொத்தமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வருடத்தில் மாத்திரம் 16 ஆயிரம் பேர் பிரித்தானியா நோக்கி படகில் பயணித்துள்ளனர் என பிராந்திய கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
குடியேற்றவாசிகளின் வன்முறை: மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து..அவசர அழைப்பு விடுத்த ஜேர்மனி News Lankasri
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan