இயக்கச்சியில் மாணவர்களின் நன்மை கருதி உருவாகும் புதிய முயற்சி
இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையின் புதிய முயற்சியாக கல்விப்பாசறை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறித்த கல்விப் பாசறை திறப்பு விழாவானது நாளை (16) இடம்பெறவுள்ளது.
ஓரிரு மாதங்களிற்கு முன்னர் அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கான மருத்துவ பாசறை கடந்த வருட இறுதியில் உருவாக்கப்பட்ட நிலையில் தற்போது இயக்கச்சி பகுதியிலுள்ள மாணவர்களின் நன்மை கருதி இலவசமான முறையில் றீ(ச்)ஷாவின் கல்விப்பாசறை திறப்பு விழா இடம்பெறவுள்ளது.
மாலை நேர வகுப்புக்கள்
இதில் 5 தொடக்கம் 11 வரையான மாணவர்களிற்கு மாலை நேர வகுப்புக்கள் இடம்பெறும்.
குறிப்பாக நவீன வசதிகளுடைய வகுப்பறைகளில் மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.
இந்த பாசறையில் அப்பகுதியிலுள்ள மாணவர்கள் கலந்து பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
