டெங்கு நுளம்பு பரவும் அபாயம் உள்ள இடங்களுக்கு சிவப்பு அறிவித்தல்
ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவின்கீழ் உள்ள மாங்குளம் பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை ஒன்று நேற்றையதினம்(04) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவின்கீழ் உள்ள புதிய கொலணி மாங்குளம் பகுதியில் டெங்கு அடையாளம் காணப்பட்டதனையடுத்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெங்கு நுளம்பு பரவும் அபாயம்
மாங்குளம் ஆதார வைத்தியசாலை வளாகம் மற்றும் மாங்குளம் புதிய கொலணி ,பழைய கொலணி பகுதியில் உள்ள வீட்டு வளாகங்களும் பரிசோதிக்கப்பட்டிருந்தது.

அப்போது டெங்கு நுளம்பு பரவும் அபாயம் உள்ள இடங்களை கொண்ட வளாகங்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டதுடன் சட்ட நடவடிக்கைக்கும் உட்படுத்தப்பட்டனர்.
வளாக உரிமையாளர்கள் பொது சுகாதார பரிசோதகர்களினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் நதிருசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த சோதனை நடவடிக்கையில் முத்தையன்கட்டு பொது சுகாதார பரிசோதகர் லோஜிதன் மற்றும் ஒட்டுசுட்டான் பொது சுகாதார பரிசோதகர் டிலக்சன் ஆகியோரும் இணைந்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 17 மணி நேரம் முன்
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam