தென்னிலங்கையில் பரபரப்பு - மாணவியும் இளைஞனும் சடலமாக மீட்பு
தென்னிலங்கையில் பாடசாலை மாணவி ஒருவரும் இளைஞன் ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில் பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 16 வயதுடைய பாடசாலை மாணவியும் 20 வயதுடைய இளைஞரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் பொஹெம்பியகந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த இருவருக்கும் காதல் தொடர்பில் இருந்ததாக கரந்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தற்கொலையா அல்லது கொலையா என விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளாக இருந்தாலும் நியாயம் வேண்டும்! - இலங்கை அரசாங்கம் அறிவிப்பு (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam