மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு
மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று (14.08.2024)மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் தலவாக்கலை மேற்பிரிவு தோட்டப்பகுதியைச் சேர்ந்த 24வயது கொண்ட டி.மதுஸான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தேடும் நடவடிக்கை
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் நேற்று முன்தினம் (12.08.2024) தீடீரென காணாமல் போயுள்ளார்.
குறித்த நபரை தேடும் நடவடிக்கையினை உறவினர்கள் முன்னெடுக்கப்பட்டப்போதும் அது பயனளிக்கவில்லை.
தலவாக்கலை பொலிஸ்
இதன் பின்னர் நேற்றைய தினம் (13.08.2024) தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில்உறவினர்கள் முறைபாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இளைஞன் இன்று (14.08.2024) சடலமாக மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மிதந்துக்கொண்டு இருந்ததை பிரதேசவாசிகள் கண்டு தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதற்கமைய சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri