யாழின் முக்கிய பகுதி ஒன்றில் மனித எச்சங்கள் மீட்பு (Video)
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டாரப் பகுதியில் கிடங்கு ஒன்று வெட்டப்பட்ட நிலையில் அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.
வீடொன்றின் கட்டுமானம் மேற்கொள்வதற்காகக் கிடங்கு வெட்டியபோதே குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதி குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் இன்றையதினம் (21.06.2023) அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஊர்காவற்துறை நீதிவான் கஜநிதிபாலன் முன்னிலையில் குறித்த குழி மேலதிகமாக அகழப்பட்ட நிலையில் 27 பற்கள் உட்பட ஒரு மனித எலும்புகூடு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சான்றுப் பொருட்கள் ஆய்விற்காக அனுப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த மனித எச்சங்கள் சுமார் 20 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என ஊர்காவற்றுறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 15 மணி நேரம் முன்
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri