யாழ். வடமராட்சி கிழக்கு கடற்கரையில் காணாமல்போன மீனவரின் சடலம் மீட்பு
யாழ். வடமராட்சி கிழக்கு, குடாரப்பு பகுதியிலுள்ள கடற்கரையில் காணாமல்போன மீனவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
கரிதாஸ் வீதி, வள்ளிபுனம், மு/புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பி.ரவிச்சந்திரன் என்பவரே இன்று (15.02.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.02.2023) மாலை யாழ். வடமராட்சி கிழக்கு, குடாரப்பு பகுதியிலுள்ள கடற்கரையிலிருந்து தெப்பத்தில் கடற்றொழிலுக்காக இருவர் சென்றுள்ளனர்.

குடாரப்பு கடற்கரை
இதன்போது, தெப்பம் கடலில் மூழ்கியுள்ளது. அதில் ஒருவர் நீந்திக் கரைசேர்ந்துள்ள நிலையில், மற்றவர் கடலில் மூழ்கி காணமல்ப்போயுள்ளார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை குடாரப்பு கடற்கரை பகுதியில் காணாமல்போன மீனவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
இதனையடுத்து, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி
எஸ்.சிவராசா, பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam