குடிவரவு திணைக்களத்தில் ஒருவர் சடலமாக மீட்பு
பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு திணைக்களத்தின் கட்டிடமொன்றின் மேல் மாடியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சடலமானது இன்று (04.06.2023) மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 73 வயதுடைய ஹோகந்தர பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் அந்த அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றியவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இராணுவ அதிகாரி ஒருவர் சேவை நோக்கத்திற்காக இன்று காலை கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள துப்புரவுப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்த போது, அதன் முன் நாற்காலியில் இந்த நபர் இறந்து கிடப்பதைக் கண்டுள்ளார்.
இதனையடுத்து தலங்கம பொலிஸாருக்கு அறிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |