வெளிநாட்டு சிறைக் கைதிகளிடம் இருந்து 07 தொலைபேசிகள் மீட்பு
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுச் சிறைக் கைதிகளிடம் இருந்து 07 தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 7 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அறிவிப்பு
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் எச் வார்டில் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வார்டில் வெளிநாட்டு குடியுரிமை கொண்ட சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, இந்த கையடக்கத் தொலைபேசி நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பல சந்தேக நபர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.