இலங்கையில் மூன்றாவது தடுப்பூசியாக ஃபைசர் தடுப்பூசியை வழங்குமாறு நிபுணர் குழு பரிந்துரை
இலங்கையில், சினோஃபார்ம் தடுப்பூசிகளை பெற்றவர்கள் மத்தியில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, மூன்றாவது தடுப்பூசியாக ஃபைசர் தடுப்பூசியை வழங்க வேண்டும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
சுகாதார சேவைகளின் துணை இயக்குநர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) இதனை அறிவித்துள்ளார்.
அதன்படி, தொற்று நோய்களுக்கான ஆலோசனைக் குழு, 60 அகவைக்கு மேற்பட்ட அனைவருக்கும் மற்றும் 30-60 அகவைக்குட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஃபைசர் தடுப்பூசியை மூன்றாவது மருந்தாக வழங்க பரிந்துரைத்துள்ளது.
எனினும் இறுதி முடிவு, உரிய நேரத்தில் சுகாதார அமைச்சால் எடுக்கப்படும், அதன்பிறகு தொடர்புடைய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்," என்று ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏனைய தடுப்பூசி பெறுபவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசிகளை வழங்குவதற்கான முடிவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், மூன்றாவது தடுப்பூசிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கும் வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பின்னரே பொதுவாக மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
