எரிவாயு விலையை 400 ரூபாவினால் அதிகரிக்க பரிந்துரை
எரிவாயு சிலிண்டரின் விலையை 400 ரூபாயில் அதிகரிக்க நுகர்வோர் விவகார ஆணையத்தினால், அமைச்சின் துணைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர்களான பந்துல குணவர்தன, கெஹேலிய ரம்புக்வெல்ல, வாசுதேவ நாணயக்கார, மஹிந்த அமரவீர மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அடங்கிய துணைக்குழுவினால் இது தொடர்பில் நீண்ட காலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லிற்ரோ கேஸ் நிறுவனம், தங்கள் எரிவாயு சிலிண்டர் ஒன்றை 600 ரூபாயிலும், லாப்ஸ் கேஸ் நிறுவனம், தங்கள் எரிவாயு சிலிண்டர் ஒன்றை 700 ரூபாயிலும் அதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
எப்படியிருப்பினும் மக்கள் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் எரிவாயு விலையை அதிகரிக்க முடியாதென அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மாற்று முறை ஒன்றை அறிமுகப்படுத்தி வைக்குமாறு அமைச்சின் துணைக்குழுவினால் நுகர்வோர் விவகார ஆணையம் மற்றும் நிறுவனங்களிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 16 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam