மன்னாரில் பரிந்துரைவாத நிகழ்ச்சித் திட்டம்
மன்னார் மாவட்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான பரிந்துரை வாத நிகழ்ச்சித் திட்டம் மன்னார் மாவட்ட மனித உரிமைகள் முதலுதவி மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என தெரிவு செய்யப்பட்ட குழுவினருக்கு இந்த நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட பயிற்சி
சமூக மட்டங்களில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றை அறிந்து ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எவ்வாறு அவற்றை சமூக மட்டங்களுக்கு கொண்டு செல்வது தொடர்பாகவும் இந்த நிகழ்வில் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி திட்டத்தில் ரைட் டு லைப் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர்களான பிரசாந்த் மற்றும் சுனீத் மற்றும் மன்னார் மாவட்ட மனித உரிமைகள் முதலுதவி மையத்தில் மாவட்ட இணைப்பாளர் டிலக்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செயல்பாடு எதிர்காலத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடையே இணைப்பை ஏற்படுத்தி சமூகப் பிரச்சினைகளை அடையாளப்படுத்துவதை பிரதானமாகக் கொண்டதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.



ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri
