நோர்வேயில் இலங்கை தமிழருக்கு கிடைத்த அங்கீகாரம்
நோர்வேயின் கால்பந்தாட்ட கழகமொன்றின் முதன்மை பயிற்சியாளராக இலங்கை தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பாவின் UEFA தேர்வில் தேர்ச்சியை பெற்ற சஞ்சீவ் (சண்) மனோகரன் என்ற இளைஞரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழருக்கு கிடைத்த அங்கீகாரம்
கடந்த ஆண்டு ஜனவரி முதல் கழகத்தின் வளர்ச்சி மையத்தில் பணியாற்றி வந்த இவர், தற்போது தற்காலிக முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என கழகம் அறிவித்துள்ளது.

டென்மார்க்கில் பிறந்த இவர் பத்தாண்டுகளுக்கு மேலாக டென்மார்க்கின் சூப்பர் லிகா தொடரின் ஏசிஎஃப் கிளப்பின் 10 வயது முதல் 19 வயது வரையிலான ஜூனியர் அணிகளுக்கான பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் முதல்தர கால்பந்து கழகத்தின் பயிற்சியாளராக பணியாற்றும் வாய்ப்பை பெற்ற முதல் இலங்கை தமிழர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சஹ்ரான் குழு குறித்து சிக்கிய ஆதாரங்கள்: விடுதலைப் புலிகள் மீது திசை திருப்பிய புலனாய்வு பிரிவு: அம்பலமான தகவல்
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan