இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடி! விசேட விமானத்தில் வெளியேற முற்பட்ட சுவிஸ் அதிகாரி
கோட்டாபய ராஜபக்சவை கடத்த முற்பட்டதாக கூறப்பட்ட சுவிஸ் தூதரக பெண் அதிகாரி, விசேட விமானத்தில் வெளியேற முற்பட்டதாக பிரித்தானியாவை சேர்ந்த இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் பாரிய போராட்டம் நடைபெற்ற வேளையில் சவேந்திர டி சில்வா மீது பயணத்தடை ஒன்று கொண்டுவரப்பட்டது.
அதன்பின்னர், ரம்புக்வெல்ல பகுதியில் ஒருவர் கொல்லப்பட்டதற்கு தன்னை இரண்டு ஐரோப்பிய ஒன்றியங்களின் தூதுவர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் ஒருவரும் மிரட்டியதாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
எனினும், போராட்டக்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பாக அவர்கள் எதையும் கூறவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தாகவும் விவரிக்கப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.
இராணுவ ஆய்வாளர் அரூஸ் மேலும் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri