கடும் அச்சத்தில் கோட்டாபய - அநுரவிடம் சிக்கியுள்ள மறைக்கப்பட்ட இரகசியம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்சவை கைது செய்ய சமகால அநுர அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது.இதற்கு வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதுகள் தொடர்பில் அடுத்தடுத்த கட்டங்கள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கோட்டாபய மிகவும் அச்ச நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபய வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தடை உத்தரவின் காரணமாக இந்த அச்ச நிலையை உறுதியாகி உள்ளதாக ராஜபக்சர்கள் நம்புகின்றனர்.
மனு தாக்கல்
இந்த சூழ்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து, கோட்டபாயவை கைது செய்வதையும் தடுப்புக்காவலில் வைப்பதையும் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரியுள்ளனர்.

இந்த மனுவில் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அதன் நிலையப் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத்தடையால் தனது தனிப்பட்ட சுதந்திரம் பறிபோயுள்ளதாகவும், இதன் காரணமாகவே தாம் கைது செய்யப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என கோட்டபாய குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் இது தொடர்பாக தன்னிடம் எந்தவொரு வாக்குமூலமும் பெறப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்தசம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்கும் சாட்சிகளை அல்லது பொலிஸ் உத்தியோகத்தர்களை தனக்குத் தெரியாது. செனல் 4 தொலைக்காட்சியில் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா என்பவரையும் தனக்கு தெரியாது என அவர் கூறியுள்ளார்.
அரசியல் பழிவாங்கல்கள்
தாம் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய, ஷானி அபேசேகர தன் மீது பழிவாங்கும் எண்ணத்தில் இருக்கலாம் என அவர், குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஆணைக்குழுவின் அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இது குறித்து ஆராயுமாறும், தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறும் கோரியுள்ளார்.
இருப்பினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் எந்தவித தொடர்பும் இல்லையென்றால் முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு பயப்படுவதற்கு என்ன காரணம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
குறிப்பாக, அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டதை அடுத்து, சுரேஷ் சலே உணவைத் தவிர்ப்பதற்கு தீர்மானித்தமை மற்றும் அரசியல் அரங்கில் அவரை விடுவிக்குமாறும், கடவுச்சொற்களை வழங்க வேண்டாம் எனவும் கோரி ஏற்பட்ட பரபரப்பின் பின்னணியில் ஏதோவொரு கடுமையான சூழ்நிலை இருப்பதாக தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri