திங்களன்று தயாராக இருங்கள்! ரணிலிடம் தெரிவித்தார் கோட்டாபய
எதிர்வரும் திங்கட் கிழமை பிரதமராகப் பதவியேற்க தயாராக இருக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்ததாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்படடுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று மாலை கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் பின்னர் ரணில் விக்ரமசிங்கவை இவ்வாறு பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்ததாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
இதேவேளை, பிரதமர் பதவிக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்று வேட்பு மனுக்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.
இதன்படி, புதிய பிரதமராக விஜேதாச ராஜபக்ச, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்மொழியப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
