இலங்கையை ஒரு மாதத்தில் மீட்க தயார் - நிபந்தனை விதித்த சுவிஸ் புலம்பெயர் அமைப்பு
இலங்கைக்கு தேவையான மாதாந்தம் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கத் தயார் என இலங்கை தேசப்பற்றுள்ள புலம்பெயர் அமைப்பு தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க தேசிய அரசாங்கம் ஊடாக பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால் நாட்டுக்குத் தேவையான பணம் வழங்கப்படும் என சுவிட்சர்லாந்தின் லூசர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர் கலாநிதி நிலங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து எப்படி மீள்வது? சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளில் இருந்து மீள்வது எப்படி? புதிய தேசியமாக நாடு எப்படி மீண்டு வரும் என்பது தொடர்பில் அரசாங்கம் மற்றும் எதிர்கட்சி இணைந்து எங்களுக்கு ஒரு வரைபடத்தை காண்பித்தால் இலங்கைக்கு உதவுவோம்.
எந்தெந்த அர்ப்பணிப்புகளை செய்கின்றோம் என்பது தொடர்பிலும் அரசாங்கம் மற்றும் எதிர்கட்சியினர் இணைந்து அனைத்துக் கட்சி தேசிய பேரவையின் ஊடாக பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால் ஒரு மாதத்திற்குள் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க நாங்கள் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
