இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்! (Photos)
மறைந்த முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (01/04/2023) நினைவு கூரப்பட்டது.
இன்று காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேர்ருட் கலாநிதி இம்மானுவேல் ஆண்டகையின் தலைமையில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மறைந்த ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் கல்லறையில் அஞ்சலியும் வழிபாடும் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து மன்னார் நகரின் மத்தியில் அமைந்துள்ள ஆயரின் உருவம் அமைந்துள்ள இடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
அனைத்து நிகழ்வுகளிலும் பெருமளவிலான குருக்களும், துறவிகளும், மக்களும் கலந்து கொண்டனர்.