நித்தகைக்குளத்தின் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து

Mullaitivu Northern Province of Sri Lanka Thurairajah Raviharan
By Shan May 02, 2026 04:23 AM GMT
Report

மந்தகதியில் இடம்பெறும் நித்தகைக் குளத்தின் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் நித்தகைக்குளம் கமக்கார அமைப்பினர் ஆகியோரால் நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் நித்தகைக்குளத்தின் சீரமைப்புப் பணிகள் முழுமைப்படுத்தப்பட்டு, குளத்தினை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவுமாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் உறுதியளித்துள்ளார்.

பிக்கு ஒருவரின் மோசமான செயல் - நீதிமன்றில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பொலிஸார்

பிக்கு ஒருவரின் மோசமான செயல் - நீதிமன்றில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பொலிஸார்

விவசாயிகளின் தொடர்ச்சியான கோரிக்கை

நித்தகைக்குளத்தின் சீரமைப்புப் பணிகள் தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் நித்தகைக்குளம் விவசாயிகள் ஆகியோருக்கிடையில் 30.04.2026இன்று நித்தகைக்குளம் பகுதியில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன்போதே இவ்வாறு நீர்ப்பாசனப் பொறியியலாளரால் பதிலளிக்கப்பட்டுள்ளது.

நித்தகைக்குளத்தின் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து | Ravikaran Mp Stresses Expediting Renovation Work

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு நித்தகைக்குளம் மற்றும், குளத்தின் கீழான 1500ஏக்கர் வயல்நிலங்கள் என்பவற்றை வனவளத்திணைக்களம் ஆக்கிரமிப்புச் செய்திருந்தது.

இத்தகையசூழலில் அப்பகுதி விவசாயிகள் மற்றும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருடைய தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து குறித்த குளம் வனவளத் திணைக்களத்தால் விடுவிக்கப்பட்டதுடன், குளத்தின் கீழான வயல்நிலங்களும் வனவளத் திணைக்களத்தால் விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் அப்பகுதி விவசாயிகளின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைவாக கடந்த 2025ஆம் ஆண்டு நித்தகைக்குளத்தின் சீரமைப்பு வேலைகளுக்கென நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, குளத்தின் சீரமைப்புவேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

வழக்குத் தொடர்வதற்கான முயற்சி

மந்தகதியில் சீரமைப்புப்பணிகள் இடம்பெறுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் விவசாயிகளால் இதன்போது நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதன்போது பிரதிநீர்ப்பாசனப் பணிப்பாளர் பதிலளிக்கையில்,

இதுவரை 40வீதமான அபிவிருத்தி வேலைகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் 30.06.2026ஆம் திகதிக்குள் வேலைகள் பூர்த்திசெய்யப்பட்டு விவசாயிகளுக்காக குறித்த குளம் கையளிக்கப்படுமென ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், கடந்த காலத்தில் ஏற்பட்ட டித்வா பேரனர்த்த காலத்தில் அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ள முடியாதமையினால் உரியகாலத்திற்குள் குளத்தின் சீரமைப்பு வேலைகளை முடிவுறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நித்தகைக்குளத்தின் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து | Ravikaran Mp Stresses Expediting Renovation Work

இருப்பினும் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் குளத்தின் சீரமைப்பு வேலைகளை முழுமைப்படுத்தி விவசாயிகளிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கோள்ளப்படுமென பிரதி நீர்ப்பாசனப்பணிப்பாளர் விகிர்தன் தெரிவித்தார்.

அத்தோடு குறித்த குளத்தின் அபிவிருத்தி வேலை தொடர்பான திட்ட வரைபடம் மற்றும் தமிழ் மொழியிலான திட்டவரைபு என்பவற்றை தாம் ஒருவருடத்திற்கு முன்னரே நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் கோரியிருந்தபோதும் இதுவரை கையளிக்கப்படவில்லை என விவசாயிகளால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் மேமாதம் 06ஆம் திகதிக்கிடையில் தமிழ்மொழிமூலமான திட்டவரைபு மற்றும் வரைபடம் என்பவற்றை தாம் விவசாயிகளிடம் கையளிப்பதாக முத்துஐயன்கட்டு பிராந்திய நீர்ப்பாசனப் பொறியியலாளரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், ஒக்டோபர் மாதத்திற்குள் அபிவிருத்தி வேலைகளை முடிவிற்கு கொண்டுவந்து விவசாயிகளிடம் குளத்தினை கையளிப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எம்மிடம் உறுதியளித்துள்ளனர்.

இவ்வாறு நீர்ப்பாசனத் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டதற்கமைவாக அபிவிருத்தி வேலைகள் முடிவுறுத்தப்பாடாதுவிட்டால், விவசாயிகள் வழக்குத் தொடர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

60 மில்லியன் இலஞ்ச ஊழல் விசாரணை: மகிந்த ராஜபக்‌சவுக்கு அழைப்பு என தகவல்!

60 மில்லியன் இலஞ்ச ஊழல் விசாரணை: மகிந்த ராஜபக்‌சவுக்கு அழைப்பு என தகவல்!

10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US