உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை: சந்தேக நபராக பெயரிடப்பட்ட அநுரவின் சகா

CID - Sri Lanka Police Easter Attack Sri Lanka Law and Order
By Dharu Oct 24, 2024 05:03 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில் சந்தேக நபராக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன உள்வாங்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் மூன்று அறிக்கைகளை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்து அது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் வெளியிடப்பட்ட பி அறிக்கை தொடர்பான ஆவணங்களை ஊடகவியலாளர் ஒருவர் பெற்றுக்கொண்ட விதம் பிரச்சினைக்குரியது எனவும், தாக்குதல் தொடர்பான விசாரணையில் திருப்தி அடைய முடியாது எனவும் அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி இந்தக் கோரிக்கையை பரிசீலித்த நீதவான், எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு

சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு

மனு தாக்கல் பின்னணி

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு.ரவி செனவிரத்னவின் கீழ் உயிர்த்த ஞாயிறுகுண்டுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணை ஏற்றுக்கொள்ள முடியாதது என பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை: சந்தேக நபராக பெயரிடப்பட்ட அநுரவின் சகா | Ravi Senaviratne At The Easter Sunday Attack Trial

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் செயலாளரினால் நியமிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் சந்தேக நபராக அவர் பெயரிடப்பட்டுள்ளமையினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி சஜித கமகே இது தொடர்பில் கோட்டை நீதவான் தனுஜா லக்மாலிக்கு அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மூன்று ஆணைக்குழு அறிக்கைகளையும் வரவழைத்து விசாரணையில் தலையிடுமாறு சட்டத்தரணி நீதிமன்றிடம் கோரியுள்ளார்.

196 ஆசனங்களுக்கு போட்டியிடும் 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள்

196 ஆசனங்களுக்கு போட்டியிடும் 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள்

கோரிக்கை பரிசீலனை

தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளியிடப்பட்ட பி அறிக்கை தொடர்பான ஆவணத்தை ஊடகவியலாளர் ஒருவர் பெற்றுக்கொண்ட விதம் பிரச்சினைக்குரியது எனவும் விசாரணையில் திருப்தி அடைய முடியாது எனவும் சட்டத்தரணி நீதிமன்றில் தலையிடுமாறு விளக்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை: சந்தேக நபராக பெயரிடப்பட்ட அநுரவின் சகா | Ravi Senaviratne At The Easter Sunday Attack Trial

இந்தக் கோரிக்கையை பரிசீலித்த நீதவான், எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

பிரேரணை ஒன்றை தாக்கல் செய்து இந்தக் கோரிக்கையை முன்வைத்த சட்டத்தரணி, தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் கோரியுள்ளார்.

தென்னிலங்கையில் குழந்தையை காப்பாற்றுவதற்காக உயிர் விட்ட இளம் தாய்

தென்னிலங்கையில் குழந்தையை காப்பாற்றுவதற்காக உயிர் விட்ட இளம் தாய்

பொது பாதுகாப்பு செயலாளர்

இந்த சம்பவத்தில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளவர் இதில் பொது பாதுகாப்பு செயலாளராக செயற்படுகின்றனர். இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க தமக்கு அதிகாரம் இல்லை எனவும் விசாரணையில் திருப்தி அடைய முடியாது எனவும் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை: சந்தேக நபராக பெயரிடப்பட்ட அநுரவின் சகா | Ravi Senaviratne At The Easter Sunday Attack Trial

மேலும், “இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் பொது ஊடகம் ஊடாக கருத்து வெளியிட்டுள்ளார். விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்படுவார் என்றும் ஒரு நாளில் அந்த அதிகாரி பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுக்களின் நீதிபதிகளுக்கு எதிராக சில அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.

இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது ஏற்புடையதல்ல. திறமையான நீதிபதிகள் இந்த அறிக்கைகளைத் தயாரித்தனர். இந்த அறிக்கை எப்படி சென்றது என்பதை ஆராயுங்கள்.

கைது செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கே உள்ளது. உயிரிழந்தவர்கள் சார்பாக இந்த கோரிக்கையை விடுக்கின்றேன்’’ என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

கண்டியில் அவுஸ்திரேலிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

கண்டியில் அவுஸ்திரேலிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் உப சரத்து 52 (1) இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன(ரவி செனவிரத்ன) நியமிக்கப்பட்டுள்ளார்.

ரவி செனவிரத்ன, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் தொடர்பில் முதுமாணிப் பட்டம் பெற்றவராவார்.

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான அவர், விசேட அதிரடிப் படையின் ஆரம்பகால உறுப்பினராகவும், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளராகவும், தாய்லாந்துக்கான இலங்கைத் தூதரகத்தின் முன்னாள் முதல் செயலாளராகவும், இன்டர்போல் இலங்கைக் கிளையின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US