பிரிக்கப்படாத நாடு தொடர்பில் சுமந்திரன் கூறிய விடயம்! நினைவுப்படுத்தும் ரவூப் ஹக்கீம்
நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில் அரசியலமைப்பில் உள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு அவர் கட்டுப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் அரச கொள்கை விளக்கவுரை மீதான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பண்டாரநாயக்கவின் உயிரை பறித்தவரும் பௌத்த துறவியே. அதேபோன்ற வரலாறு மீண்டும் நடந்து வருகிறது என்றே கூற வேண்டும்.
இந்த சபையில் உரையாற்றியிருந்த சுமந்திரன், பிரிக்கப்படாத நாட்டிற்காகத்தான் எழுந்து நிற்பதாக பல தடவைகள் கூறியுள்ளார். இதனால் ஏன் அதிகார பரவலாக்கம் தொடர்பில் அலட்டிக் கொள்ள வேண்டும் என வினவியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தின்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,