தொடருந்து திணைக்கள ஊழியர் படுகொலை: இரத்மலானையில் சம்பவம்
இரத்மலானையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தொடருந்து திணைக்கள ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை தொடருந்து குடியிருப்பில் அமைந்துள்ள வீட்டினுள் வைத்து நேற்று (12.09.2023) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மாத்தறை, பியகஹா பகுதியைச் சேர்ந்த 41 வயதானவர் எனவும், அவர் தொடருந்து குடியிருப்பில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
தனிப்பட்ட தகராறு காரணமாக தொடருந்து திணைக்கள ஊழியரை ஒருவர் கத்தியால் குத்தியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
