ஏப்ரல் 7ஆம் திகதி மாயமாகவுள்ள மனித நிழல்கள்..! மக்களுக்கு அரிய வாய்ப்பு
எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி, திங்கட்கிழமை மதியம் 12:12 மணிக்கு சூரியன் கொழும்புக்கு நேராக உச்சம் கொடுக்கும் என்றும், இதனால் செங்குத்து நிழல்கள் சிறிது நேரத்தில் மறைந்து விடும் என்றும் வானியலாளர் அனுர சி. பெரேரா கூறியுள்ளார்.
இது உண்மையில் ஒரு ஒளியியல் மாயையாக இருக்கும் என்று என்று பெரேரா விளக்கியுள்ளார். ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில், சூரியன் இலங்கையின் மீது நேரடியாக உச்சம் கொடுக்கிறது.
இதன் விளைவாக அதிகபட்ச சூரிய வெப்பம் ஏற்படும். இதன்படி ஏப்ரல் 5 முதல் 15ஆம் திகதி வரை, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும்.
உச்ச சூரியன்
வானியலாளர் பெரேராவின் கூற்றுப்படி, “உச்ச சூரியன்” அல்லது “சூரியன் நேரடியாக உச்சம்” என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு ஏப்ரல் 4ஆம் திகதி பருத்தித்துறையில் நிகழும்.
எல்பிட்டியவில் ஏப்ரல் 5ஆம் திகதியும், களுத்துறையில் ஏப்ரல் 6ஆம் திகதியும், கொழும்பு மற்றும் களனி ஆகிய இடங்களில் ஏப்ரல் 7ஆம் திகதியும் மஹியங்கனையில் ஏப்ரல் 8 ஆம் திகதியும் சூரியனின் நேரடி உச்சம் நிகழவுள்ளது.
இந்தநிலையில், ஏப்ரல் 15ஆம் திகதியன்று சூரியனின் உச்சம் நாட்டைக் கடந்துச்செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
