மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க
அங்குகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமாநாயக்க, சிறைச்சாலை அதிகாரிகளால், இன்று காலை காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மருத்துவப் பரிசோதனைக்காக அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சிறைச்சாலை பேருந்தில், கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் ரஞ்சன் அழைத்துச் செல்லப்பட்டதுடன் கராப்பிட்டிய வைத்தியசாலை சூழலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ரஞ்சன், தற்போது நான்கு ஆண்டு சிறைத்தண்டனையின் கீழ் அங்குகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.