நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

Ranil Wickremesinghe Independence Day Sri Lanka Sri Lankan political crisis Africa
By Kamal Feb 03, 2023 03:51 PM GMT
Report

தீர்வுகளை முன்வைப்பதற்காக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆபிரிக்க தூதுவர்களை இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது இலங்கை வெளிவிவகார கொள்கையின் புதிய கட்டம் தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி, சிரமமான காலகட்டத்தின்போது இலங்கையும் ஆபிரிக்காவும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்கியமையையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

மேலும் இலங்கைக்கும் சில ஆபிரிக்க நாடுகளுக்கும் பொதுவான சட்ட முறைமை இருப்பதாகவும் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார். ஆபிரிக்க பிராந்தியத்துடன் இலங்கையும் குறிப்பிடத்தக்க பொருளாதார உறவுகளைப் பேணி வருகின்றது.

இந்த உறவு மேலும் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆபிரிக்க கண்டம் ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும் அண்மைய தசாப்தங்களில் அதன் முதலீடு, சுற்றுலா மற்றும் குடிவரவு என்பன வளர்ச்சியடைந்துள்ளன.

வெளிநாட்டு தூதுவர்கள் பாராட்டு

நாட்டில் அமைதியை பேணுதல் மற்றும் ஆபிரிக்க கண்டத்துடனான உறவைப் பலப்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி வழங்கி வரும் அர்ப்பணிப்புக்கும் ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த வெளிநாட்டுத் தூதுவர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

பொருளாதார கூட்டுறவு, முதலீடு, இலங்கையில் சுற்றுலாத்துறையை விஸ்தரித்தல், தென்னாபிரிக்காவின் உதவியைப் பெற்றுக் கொடுத்தல், இனங்களுக்கிடையே நிலையான நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்காக உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை நிலைநிறுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதிலேயே தாம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அத்தூதுவர்கள் தெரிவித்தனர்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் | Ranilwikcramasinghe African Deplomats

“75 வருடங்களுக்கு முன்னர் சுதந்திரம் பெற்ற இலங்கை, அக்காலத்தில் சுதந்திரம் பெற்ற நாடுகளின் குரல்களை ஓங்கச் செய்வதற்காக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பர்மா ஆகிய நாடுகளுடன் இணைந்து செயற்பட்டது.

இதன் விளைவாகவே மேற்படி நான்கு சக்திகள் மற்றும் இந்தோனேஷியா என்பன இணைந்து, கொழும்பு பவர் மாநாடு (Colombo Power Conference ) உருவானது. மேலும், இதனை அப்ரோ – ஆசியா (Afro-Asia) மாநாடு என அழைக்கவும் அப்போது தீர்மானிக்கப்பட்டது.

மேலும் உலக விவகாரங்களில் தமக்கும் குரல் உண்டு என்ற எண்ணத்தை நிலைநாட்டுவதற்கு அணிசேரா இயக்கம் ஆபிரிக்க நாடுகளுக்கு வாய்ப்பளித்தது என்றும் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார்.

மேலும் ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவு அளித்தமைக்காகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஆபிரிக்க நாடுகளைப் பாராட்டினார்.

இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது,

உலகின் ஆட்சிக்கட்டமைப்பு மாற்றம்

1980 களில், சோவியட் யூனியனின் வீழ்ச்சியுடன் உலகின் ஆட்சிக் கட்டமைப்பு மாற்றம் கண்டது. இதற்கிடையில், போரின் விளைவாக இலங்கை மீது முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது.

போருக்குப் பின்னரும், பொருளாதாரம் மற்றும் நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக நாட்டின் மீது கவனம் செலுத்தப்பட்டது. எனினும் தற்போது அந்த கட்டம் முடிவுக்கு வருகிறது.

"அதிகாரமானது தற்போது நேர்மையான வழியில் மேற்கிலிருந்து கிழக்கிற்கும் ஆசியாவிற்கும் அப்படியே ஆபிரிக்காவிற்கும் மாற்றமடைவதைக் காணமுடிகிறது.”அந்த அதிகார மாற்றம் தொடர வேண்டும்.

நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் | Ranilwikcramasinghe African Deplomats

சீனாவுடன் கிழக்கு ஆசியா உருவாகி வருவதை நாம் பார்க்கும்போது, இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவுடன் தெற்காசியாவும் இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இதனைப் பின்பற்றும் என தெரிகின்றது.

எமக்கும் பாரிய குரல் இருக்கிறது என்பதை உறுதி செய்வதற்காக இந்த உறவை மேலும் வலுப்படுத்த வேண்டியது கட்டாயம். இங்கே இரண்டு விடயங்கள் உள்ளன.அதில் ஒன்று நாம் தலையிட மறுக்கும் உக்ரைன் விவகாரம். மற்றையது தாய்வானில் உருவாகி வரும் நிலைமை.இன்று உலகில் நடப்பவை பக்கச் சார்பானவை.

குறிப்பாக ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை, அது அதிக வளங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அதேசமயம் தமது குரலையும் வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பல இலங்கை நிறுவனங்கள் ஆபிரிக்காவில் முதலீடு செய்வதற்கு காத்திருக்கின்றார்கள். அவர்களை நாம் ஊக்குவிக்கின்றோம். ஆபிரிக்காவுக்கு எம்மாலான அனைத்து உதவிகளையும் செய்ய நாம் தயாராக இருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US