காலிமுகத்திடல் போராட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவின் அணியினர் இருந்தனர்-சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார
இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற காலிமுகத்திடல் போராட்டத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தரப்பும் கலந்துக்கொண்டதாக சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ரணில் பிரதமரானதும் போராட்ட களத்தில் இருந்து வெளியேறிய அணியினர்
இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் அணி ஒன்று போராட்ட களத்தில் இருந்தது.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர், அவரது அணியான போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வந்த ஐக்கிய தேசியக்கட்சியினர் போராட்ட களத்தில் இருந்து வெளியேறினர்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான போராட்டம் நடக்கவில்லை என்பதால், அவர்கள் போராட்டத்தில் இருந்து வெளியேறியது சிக்கல் இல்லை.
வேறு அரசியல்வாதிகளுக்கு இல்லாத பார்வை ரணிலுக்கு இருந்தது
போராட்டத்திலேயே ரணில் விக்ரமசிங்கவுக்கு இருப்பது இருந்தது.
அந்த சந்தர்ப்பத்தில் பல அரசியல்வாதிகளுக்கு இல்லாத பார்வை போராட்டம் தொடர்பில் ரணிலுக்கு இருந்தது.
போராட்டத்திற்கு முன்னர் ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியிலேயே ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்க திட்டமிடப்பட்டது.
ரணில் விக்ரமசிங்கவுடன் பேசி பயனில்லை, அவர் பிரதமராக பதவிக்கு வர ஆடைகளை தயார் செய்து வைத்துள்ளார் என அவருடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றிருந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் தெரிவித்தனர் எனவும் மனோஜ் நாணயக்கார கூறியுள்ளார்.