தூசு தட்டப்படும் ரணிலின் வழக்கு.. நாளை விசாரணை!
பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு நாளை (29.10.2025) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தனியார் பயணம் மேற்கொண்டு ஒன்றரை நாட்களுக்குள் 1.5 கோடி ரூபாய்க்கு மேல் அரசு பணத்தை வீணடித்து, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையான அன்று, நீதிமன்ற அறையில் நடந்த நிகழ்வுகளை படமாக்கி சமூக ஊடகங்களில் பரப்பிய நபர்களை உடனடியாக அடையாளம் கண்டு, கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டது.
இது உள்ளிட்ட பல முக்கிய செய்திகளுடன் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு..
இனப் பிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூட தெரியாத அநுர அரசு!அணையா தீபம் முற்றத்தில் குரு முதல்வர் குமுறல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |