நீதிமன்றில் முன்னிலையானார் ரணில்! வெளியில் முகாமிட்டிருக்கும் ஆதரவாளர்கள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.
அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
திரண்டுள்ள ஆதரவாளர்கள்
இதன்படி, சற்று முன்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.
மேலும், நீதிமன்ற வளாகத்தில் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டுள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அரச பணத்தில் தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டதாக சுமத்தப்பட்ட குற்றத்தின் அடிப்படையில், சிஐடியினரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு சில தினங்களின் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.