23ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 23ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான ஆவணங்களை ஐக்கிய தேசியக்கட்சி, தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரே தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மாத்திரமே கிடைத்தது.
அந்த பதவிக்கு பல மாதங்களாக எவரும் நியமிக்கப்படாத நிலையில், கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கும் யோசனையை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அண்மையில் நிறைவேற்றியது.