மட்டக்களப்பில் செந்தில் மற்றும் வியாழேந்திரனிடம் ஆதரவு கோரிய ஜனாதிபதி

Batticaloa Ranil Wickremesinghe S. Viyalendiran Senthil Thondaman
By K. S. Raj Aug 04, 2024 03:19 PM GMT
Report

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனிடம்(Viyalendiran) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆதரவு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இடம்பெற்ற இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சியின் போதே அவர் இவ்வாறு ஆதரவு கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் செலவுகள் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி தேர்தல் செலவுகள் தொடர்பில் வெளியான தகவல்

கடன் மறுசீரமைப்பு

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களிடம் நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி வைத்துள்ள எதிர்கால திட்டங்கள் என்ன என்பதை தெளிவூட்டியதுடன், நாட்டை கட்டியெழுப்புவதற்கான ஆலோசனைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் என்னவென்று கேட்டறிந்தார்.

மேலும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

மட்டக்களப்பில் செந்தில் மற்றும் வியாழேந்திரனிடம் ஆதரவு கோரிய ஜனாதிபதி | Ranil Seeking Support Senthil Viyajendran In Batti

எதிர்காலத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதாகவும், IMF கடன் மறுசீரமைப்பின் ஊடாக 2035 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட உள்ள வேலைத்திட்டங்கள் குறித்து தெளிவூட்டினார்.

இக்கலந்துரையாடல் நிறைவின் போது இ.தொ.கா தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானிடம் கிழக்கிலும் மலையகத்திலும் ஆதரவு கோரினார்.

மலையகத்தை தாண்டி கிழக்கிலும் மலையக தலைவர் ஒருவரிடம் ஜனாதிபதி ஆதரவு கோரியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் குகதாசனுடன் மக்களை சந்தித்த ஜனாதிபதி ரணில்

திருகோணமலையில் குகதாசனுடன் மக்களை சந்தித்த ஜனாதிபதி ரணில்

தமிழர்களுக்கான காணி வழங்கல்

கிழக்கில் உள்ள மூவின மக்களில், ஒரு சமுதாயத்திற்கும் இன்னுமொரு சமுதாயத்திற்கும் இடையில் கடும் முரண்பாடுகள் இருந்த சூழ்நிலையில், தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட கூடாது என செந்தில் தொண்டமானின் நியமனத்திற்கு எதிராக சிங்கள மக்கள் கடும் எதிர்ப்புடன் கூடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் இவ்வொருவருடத்திற்குள் சிங்கள மக்கள் மனதை வென்று தற்போது சிங்கள மக்களின் பல நிகழ்வுகள் செந்தில் தொண்டமான் தலைமையிலே நடத்தப்பட்டு வருகின்றது.

சிங்கள மக்களை போன்று முஸ்லிம் மக்களும் ஆளுநர் மாற்று இனத்தவர் என ஆரம்பத்தில் தமது அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வந்தனர்.

மட்டக்களப்பில் செந்தில் மற்றும் வியாழேந்திரனிடம் ஆதரவு கோரிய ஜனாதிபதி | Ranil Seeking Support Senthil Viyajendran In Batti

முஸ்லிம் மக்களுக்கு தேவையான நியாமாக பெற கூடிய அனைத்து வேலைத்திட்டங்களையும் பாகுப்பாடு இன்றி ஆளுநர் முன்னெடுத்ததை அடுத்து, கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் முறையாக காத்தான்குடியில் ஆளுநர் நடத்திய இப்தார் நிகழ்வில் 5000 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்துக் கொண்டு இப்தாரை சிறப்பித்து ஆளுநருடன் இணைந்து பயணிப்பதை வெளிப்படுத்தினர்.

அதேபோல கிழக்கு தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படாததால், ஆரம்பத்தில் தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பில்லாத நிலையே காணப்பட்டது.

பொங்கல் விழா, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, உலக தமிழ் கலை கலாச்சார மாநாடு, தமிழர்களுக்கான காணி வழங்கல் ,தமிழில் தேசிய கீதத்தை இசைப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியது என தமிழர்களுக்காக மேற்கொண்ட பல வேலைத்திட்டங்கள் தமிழர்கள் மத்தியில் பெரும் ஆதரவை ஏற்படுத்தியது.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பகிரங்கம்

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பகிரங்கம்

அரசியல் ஆய்வாளர்கள்

இவ்வாறு மூவின மக்களையும் சரிசமமாக நடத்தி கிழக்கில் அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு தலைவராக ஆளுநர் செந்தில் தொண்டமான் உருவெடுத்துள்ளார். மக்கள் மட்டும் இன்றி அரசியல் தலைமைகள் மத்தியிலும் ஆளுநருக்கான ஆதரவு வலுப்பெற்றது.

முன்னாள் முதலமைச்சரும், கெபினட் அமைச்சருமான நசீர் அஹமட்க்கும் ஆளுநருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் முறுகல் நிலையின் போது , கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆளுநருக்கு ஆதரவாக நின்றது முழு இலங்கையும் அறிந்த விடயமாகும்.

மட்டக்களப்பில் செந்தில் மற்றும் வியாழேந்திரனிடம் ஆதரவு கோரிய ஜனாதிபதி | Ranil Seeking Support Senthil Viyajendran In Batti

ஆளுநருக்கு மக்கள் மத்தியில் மட்டுமன்றி அரசியல் மட்டத்திலும் பெரும் வரவேற்பு காணக்கூடியதாக இருந்தது.

ஏனைய ஆளுநர்களை விட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒருபடி மேலாக அனைத்து துறைகளிலும் வேலைத்திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்துள்ளார் என்பதை நன்கு அறிந்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் இந்த அரசாங்கத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு செந்தில் தொண்டமானின் ஆதரவை கோரியுள்ளார் என அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் சமூக வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மலையகத்தை தாண்டி கிழக்கிலும் மலையக தலைவர் ஒருவரிடம் ஜனாதிபதி ஆதரவை கோரிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 

தீக்கிரையாக்கப்பட்ட இலங்கை அரசியல்வாதிகளின் வீடுகள்! காரணம் நாமல்

தீக்கிரையாக்கப்பட்ட இலங்கை அரசியல்வாதிகளின் வீடுகள்! காரணம் நாமல்

பொலிஸ் மா அதிபர் விடயத்தில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ள சுமந்திரன்

பொலிஸ் மா அதிபர் விடயத்தில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ள சுமந்திரன்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Gelsenkirchen, Germany

19 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US