பிளவடைகின்றது ஐக்கிய மக்கள் சக்தி! ரணில் பக்கம் தாவப் பலர் தயார்: வஜிர அபேவர்தன தகவல்
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணியிலிருந்து 20 இற்கும் மேற்பட்டோர் அரசாங்கத்துடன் இணைய இதுவரை இணக்கம் தெரிவித்துள்ளனர் என்றும் அவர்களுள் தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (18) கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"எதிரணியில் இருந்து வரும் உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு பலமான அரசாங்கத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிறுவவுள்ளார்.
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜே.வி.பி வெளியிட்டுள்ள தகவல் |
சர்வகட்சி அரசாங்கம்
அந்த அரசாங்கத்துக்கு சர்வகட்சி அரசாங்கம், சர்வகட்சி ஆட்சி, தேசிய அரசாங்கம் ஆகிய மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
எனவே, பலமிக்க அரசாங்கத்துக்கு இந்த மூன்று பெயர்களில் ஒரு பெயரை அதில் அங்கம் வகிக்கவுள்ள உறுப்பினர்களின் சம்மதத்துடன் ஜனாதிபதி சூட்டுவார்.
அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு அசைக்க முடியாத அரசாங்கத்தை நிறுவுவதே ஜனாதிபதியின் விருப்பம். இதற்காகப் பல கட்சிகளை அவர் தனித்தனியே சந்தித்தும், பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார்.
நாட்டை உடனடியாக மீட்டெடுக்க நடவடிக்கை
எனினும், சில கட்சிகள் இழுத்தடிப்புக்களைச் செய்கின்றன. சர்வகட்சிகளை உள்ளடக்கிய தேசிய வேலைத்திட்டத்துக்குக்கூட சில கட்சிகள் நிபந்தனைகளை விதிக்கின்றன. மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியால் சிக்குண்ட நாட்டை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். இது கட்சி அரசியல் செய்யும் நேரமல்ல.
எனவே, காலத்தை வீண்விரயம் செய்யாமல் சேர விரும்பும் உறுப்பினர்களை
இணைத்துக்கொண்டு பலமிக்க அரசை நிறுவி பொருளாதாரப் பிரச்சினை உள்ளிட்ட தேசிய
பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வுகளைக் காணும் பயணத்தை ஜனாதிபதி உடனடியாக
ஆரம்பிக்கவுள்ளார்” எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
