புதிய கூட்டணி அமைக்க தயாராகும் ரணிலின் ஆதரவாளர்கள்!
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து பொதுத் தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் நோக்கில் உருவாக்கப்படும் வகையில் இந்த புதிய கூட்டணி உருவாக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த கூட்டணி அடுத்தவாரம் அங்குரார்ப்பணம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
67 எம்.பி.க்கள்
ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முதலில் முன்வந்த எம்.பி.க்கள் குழுவில் 91 பேர் இருப்பதாகவும், தற்போது ரணிலுக்கு நிரந்தரமாக ஆதரவளிக்க 67 எம்.பி.க்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் நேற்று தெரிவித்திருந்தார்.
இதன்படி, இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் இந்த கூட்டணியை அமைப்பதற்கு எஞ்சிய எம்பிக்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பொதுச் செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் நியமிக்கப்படவுள்ளதாக கனக ஹேரத் கூறியுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமக்கு ஆதரவளிக்கும் மொட்டு கட்சியின் உறுப்பினர்களின் வெற்றியை மக்கள் பார்க்க வேண்டும் என ஜனாதிபதி அண்மையில் ஊடகப் பிரதானிகளிடம் ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார்.





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
