மன்னார் மடு திருவிழாவில் ஜனாதிபதி பங்கேற்பு: பலப்படுத்தப்படும் பாதுகாப்பு
மன்னார் மடு திருவிழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ள உள்ளமையால் விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலி நாளை (15.08.2023) காலை 6.15 மணிக்கு திருத்தந்தையின் பிரதிநிதி தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய ஆயர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்க உள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு
இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |