தமிழர்களுக்கு நீதியை நிலைநாட்டுங்கள் யார் குற்றவாளி என்றாலும் தண்டியுங்கள்! ரணில்

Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan political crisis
By Rakesh Mar 22, 2025 01:18 AM GMT
Report

''நான் இலங்கையைச் சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வதை எப்போதும் எதிர்த்து வந்துள்ளேன். எனினும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உள்ளகப் பொறிமுறையின் கீழ் நீதியை நிலைநாட்டுங்கள். யார் குற்றவாளி என்றாலும் தண்டியுங்கள். மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குங்கள்.'' என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையுடன் இணைந்து செயற்படுவது சுலபமானதாகக் காணப்பட்டது. அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யார் குற்றவாளி...? 

நேர்காணல் ஒன்றில் இதனைக் குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது,"இலங்கையை சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வதை நான் எப்போதும் எதிர்த்து வந்துள்ளேன்.


நான் என்ன தெரிவித்து வருகின்றேன் என்றால் சொன்னதைச் செய்யுங்கள். ஐ.நாவுக்கு இலங்கை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். உள்ளகப் பொறிமுறையின் கீழ் தமிழர்களுக்கு நீதியை நிலைநாட்டுங்கள். இதனைச் செய்யக்கூடாது, செய்யவேண்டாம் என நான் ஒருபோதும் தெரிவித்ததில்லை.

இதன் காரணமாகவே நான் தேர்தல்களில் தோற்றேன். நான் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டினார்கள். அது முடிவடைந்ததும் ராஜபக்சர்களுக்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டினார்கள்.

யாழில் கணவன் தாக்கியதால் இளம் தாய் எடுத்த விபரீத முடிவு

யாழில் கணவன் தாக்கியதால் இளம் தாய் எடுத்த விபரீத முடிவு

அதனை விடுவோம்.ஆனால், நான் மேற்குலகில் சமீபத்தில் பார்த்தது என்னவென்றால் இரண்டு விதமான நிலைப்பாடுகள். உக்ரைன் தொடர்பில் இரட்டை நிலைப்பாடுகளைப் பின்பற்றுகின்றனர். ஆனால், உக்ரைனுக்கு வழங்குகின்ற சாதக தன்மையை மேற்குலகம் எங்களுக்கு வழங்காது.

எனினும், உக்ரைன் ஜனாதிபதிக்கு அனைத்தையும் மாற்றுவதற்கான அனுமதியை அவர்கள் வழங்குகின்றார்கள். இதன் காரணமாகவே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஜெலென்ஸ்கியைப் பார்த்து நீங்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவில்லை என்றார். அவர்களால் ஜனாதிபதி ட்ரம்பின் மீது பாய முடியுமென்றால் எங்களின் நிலைமை என்ன?

தமிழர்களுக்கு நீதியை நிலைநாட்டுங்கள் யார் குற்றவாளி என்றாலும் தண்டியுங்கள்! ரணில் | Ranil S Interview Speech About Tamil People

ஆகவே, எங்களால் என்ன செய்ய முடியுமென்றால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே. அவர்களுடன் பேசுங்கள் மாகாண சபைகளுக்கு மேலதிக பொறுப்புக்களை வழங்குங்கள். குற்றவாளிகள் யார் என்றாலும் தண்டியுங்கள். நான் பல நடவடிக்கைகளை ஆரம்பித்தேன்.

இரட்டை நிலைப்பாடு

ஆனால், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இரட்டை நிலைப்பாடுகளைப் பின்பற்ற விரும்பினால் இலங்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அது அமைந்திருக்கக் கூடாது. நான் எவருக்கும் எதிரானவன் அல்லன்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசியக் கிளையின் செயற்பாடுகள் குறித்து விசாரணை இடம்பெற்றால் நாங்கள் தொடர்ந்தும் நீடிக்கலாம்.

தமிழர்களுக்கு நீதியை நிலைநாட்டுங்கள் யார் குற்றவாளி என்றாலும் தண்டியுங்கள்! ரணில் | Ranil S Interview Speech About Tamil People

முன்னாள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையுடன் செயற்படுவது சுலபமாக இருந்தது. அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார். அவர் எங்களது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார். அவருடன் பேச முடியும். ஆனால், தற்போதுள்ளவர்கள் எங்களை நோக்கிச் சத்தமிடுகின்றனர். எங்களால்தான் அவர்கள் அங்கிருக்கின்றார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

சிறீதரனுக்கு எதிராக சுமந்திரனின் இரகசிய முடிவு

சிறீதரனுக்கு எதிராக சுமந்திரனின் இரகசிய முடிவு

நாங்களே இரண்டாம் உலக யுத்தத்தில் போரிட்டோம். நாங்களே ஐரோப்பாவை விடுதலை செய்தோம். எத்தனை ஐரோப்பியர்கள் ஹிட்லருக்கு எதிராகப் போரிட்டார்கள். இரண்டரை மில்லியன் இந்தியர்கள் போரிட்டார்கள். இலங்கையர்கள் போரிட்டார்கள். ஆபிரிக்கர்கள் போரிட்டனர். நாங்கள் போரிட்டு ஹிட்லரைத் தோற்கடித்திருக்காவிட்டால் உங்களால் மனித உரிமை சாசனம் ஒன்றை உருவாக்க முடியாமல் போயிருக்கும்." என கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

03 Jan, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, Frankfurt, Germany

26 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

29 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Kathirippai

04 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Manchester, United Kingdom

26 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

05 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், உருத்திரபுரம்

07 Jan, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன் குமரபுரம், வட்டக்கச்சி

03 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Breda, Netherlands

04 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Zürich, Switzerland

02 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

03 Jan, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Mülheim, Germany

05 Jan, 2016
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna, Bielefeld, Germany

01 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Montreal, Canada

05 Jan, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உரும்பிராய், கொழும்பு, ஜேர்மனி, Germany

02 Jan, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
30ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

03 Jan, 1996
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US