யாழில் இடம்பெற்ற ரணிலின் தேர்தல் பரப்புரை கூட்டம்

Jaffna Ranil Wickremesinghe Sri Lanka
By Theepan Sep 07, 2024 02:56 PM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பரப்புரை கூட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பரப்புரை கூட்டமானது இன்று(07.09.2024) பிற்பகல் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றுள்ளது.

இந்த பரப்புரை கூட்டமானது முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு கோரும் தமிழ் சிவில் சமூக அமையம்

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு கோரும் தமிழ் சிவில் சமூக அமையம்


தமிழ் பேசும் மக்களின் வாக்குகள்

இதன்போது உரையாற்றிய முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர்,

“தீர்மானம் மிக்க தேர்தல் ஒன்றை நாம் தற்போது சந்தித்துள்ளோம். 


தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே யார் ஜனாதிபதி என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது. 

எனவே, நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கும் எமது வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெறச் செய்வதே ஒரே வழியாகும்.

யாழில் இடம்பெற்ற ரணிலின் தேர்தல் பரப்புரை கூட்டம் | Ranil S Election Campaign Meeting Held In Jaffna

கட்சி, இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதை யாராலும் தடுக்க முடியாது.

2002ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து நிலையை அடைந்ததையடுத்து அத்தியாவசியப் பொருட்களுக்கு பெருந் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. 

எரிபொருள், எரிவாயு என்பனவற்றை கொள்வனவு செய்ய வரிசைகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து முடக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது, நாட்டின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் நாடு ஸ்தம்பித்தது.


இதனால் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்தனர். இத்தகைய கஷ்டங்களிலிருந்தும் வரிசை யுகத்திலிருந்தும் மக்களை மீட்டெடுத்தவர் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே ஆவார்.

கடந்த கால துன்பங்களை, துயரங்களை மறந்து தற்போது சில தரப்பினர் செயற்படுகின்றனர். 

தனி ஒருவராக துணிந்து நின்று நாட்டை பொறுப்பேற்று மக்களின் கஷ்டங்களை போக்குவதற்கு நடவடிக்கை எடுத்தவர் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆவார்.

நாட்டில் மீண்டும் வரிசை யுகம் ஏற்படக் கூடாது. பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கி விடக் கூடாது என்று கருதினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சகலரும் ஆதரிக்க வேண்டும்.

யாழில் இடம்பெற்ற ரணிலின் தேர்தல் பரப்புரை கூட்டம் | Ranil S Election Campaign Meeting Held In Jaffna

நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஒருவர் பல்வேறுபட்ட அனுபவங்களைக் கொண்டவராக இருக்க வேண்டும். 

எமது தலைவர் ரணில் விக்ரசிங்க ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் செயற்பட்டிருக்கின்றார்.

இந்தப் பதவிகளில் பல்லாண்டுகால அனுபவத்தை அவர் கொண்டிருக்கிறார். அத்துடன் சர்வதேச தலைவர்களுடன் தொடர்புகளை பேணிவருகின்றார். 

முன்னணி நாடுகளுடன் தொடர்பினை பேணுகின்றார். பொருளாதார தீர்மானங்களை உடன் மேற்கொள்ளக் கூடியவராக அவர் திகழ்கின்றார். சவால்களை சந்திக்கக் கூடியவராகவும் வேலைத் திட்டங்களை கொண்டவராகவும் அவர் செயற்படுகின்றார். 

யாழில் இடம்பெற்ற ரணிலின் தேர்தல் பரப்புரை கூட்டம் | Ranil S Election Campaign Meeting Held In Jaffna

தற்போது ஜனாதிபதித் தேர்தலில் இங்கு போட்டியிடும் 38 வேட்பாளர்களில் எமது தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தவிர இந்த தகுதிகள் வேறு எவருக்கும் இல்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஏழு தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஏழு தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

கொல்கத்தா அணியில் இணையவுள்ள குமார் சங்கக்கார

கொல்கத்தா அணியில் இணையவுள்ள குமார் சங்கக்கார

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வட்டகச்சி, Bobigny, France

21 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US