ரணில் - பில் கேட்ஸ் சந்திப்பு : இலங்கைக்கு ஆதரவளிக்க தயார் என பில் கேட்ஸ் உறுதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, BMGF இணைத்தலைவரான பில் கேட்ஸுடன் ஒரு தந்திரோபாய நோக்கமுடைய சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.
டுபாயில் நேற்றைய தினம் (03.12.2023) நடைபெற்ற காலநிலை தொடர்பான COP 28 மாநாட்டிலேயே ஜனாதிபதி பில் கேட்ஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கேட்ஸ் உறுதி
இந்த சந்திப்பின் போது, மாறும் காலநிலைகளை எதிர்கொண்டு வலுவான ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு BMGF நிறுவனமானது ஆதரவளிக்கும் என கேட்ஸ் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.

காலநிலை மாற்றங்களுக்கு வினைத்திறனாக முகம்கொடுப்பதற்கு, இலங்கையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் இந்த கூட்டுறவின் நோக்கமாகும்.
COP 28 மாநாட்டில் மாறிவரும் காலநிலைகளை முகம்கொடுப்பதற்கான உலகின் முயற்சிகளில் இலங்கை முக்கியமான பங்கை வகிக்கும் என ஜனாதிபதி ரணில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 30 நிமிடங்கள் முன்
அறிவுக்கரசிக்கு தரமான பதிலடி கொடுத்த ஈஸ்வரி, ஷாக்கில் கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்து நிலா சொன்ன பதில், சேரன், சோழன் செய்தது என்ன?... அய்யனார் துணை சீரியல் Cineulagam