கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் ஒன்றுகூடிய 3 ஜனாதிபதிகள்
முன்னாள் ஜனாதிபதி செயலாளராக இருந்த காமினி செனரத்தின் மகனின் திருமண வைபவம் நேற்று முன்தினம் கொழும்பு ஷெங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்த விருந்தில் முக்கியஸ்தர்கள், உயர்மட்ட வர்த்தக சமூகத்தினர், பொதுஜன பெரமுன அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மூன்று ஜனாதிபதிகள் கலந்து கொண்டமை இங்கு காணப்பட்ட மிகவும் விசேட நிகழ்வாகும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த மூவரும் பசில் ராஜபக்ஷவும் ஒரே மேசையில் அமர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் அதி உயர்தர மதுபானம் மற்றும் அதிஉணவுகள் வழங்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களான தலதா அத்துகோரள, ஜே.சி அலவத்துவல மற்றும் ஹேஷா விதானகே ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
