ரணில் இந்த மாதம் நாடாளுமன்றம் செல்வது உறுதி! - ருவான் விஜேவர்தன
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த மாதம் நிச்சயம் நாடாளுமன்றம் செல்வார் என அந்த கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்வதற்கான திகதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும், அவர் இந்த மாதம் நிச்சயம் நாடாளுமன்றம் செல்வார் என ருவான் விஜேவர்தன கூறியுள்ளார்.
கம்பஹா வைத்தியசாலையில் புதிய கோவிட் சிகிச்சை பிரிவுக்கு ஆக்ஸிஜன் விநியோக முறையை அமைப்பதற்காக தனது தனிப்பட்ட பணத்தை நன்கொடையாக அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்றத்தில் தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு விடை காண ரணில் விக்ரமசிங்க போன்ற முதிர்ச்சியுள்ள தலைவர் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும்.
இந்நிலையில், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க விரைவில் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள அனைவரும் விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.