மாவையை தொடர்பு கொண்ட ரணில்! கோட்டாபய - பசிலால் அடுத்த நெருக்கடி
பிரதமராக ரணில் பதவி ஏற்பதற்கு முன்னர் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு தான் பிரதமராக பதவியேற்ப்பதாக அறிவித்தது உண்மையென வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமராக ரணில் பதவி ஏற்பதற்கு சற்று முன்பதாக தமிழரசுக்கட்சியின் தலைவரை தொலைபேசியில் அழைத்து, இப்படி பிரதமராக தன்னை பதவி ஏற்குமாறு ஒரு அழைப்பு இருக்கிறது. நான் அதை ஏற்றுகொள்ளலாம் என நினைக்கின்றேன். அப்படி ஏற்றுகொண்டால் உங்களுடைய விடயங்களையும் நான் கையாளலாம் என்று நினைக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்.
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri