ஜனாதிபதி - சரத் பொன்சேகா இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (07.02.2024) இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சுமார் இருபது நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி வெளிநடப்பு
இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் ஜனாதிபதி உரையாற்றிய போது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அவையை விட்டு வெளிநடப்பு செய்திருந்தனர்.
எனினும் சரத் பொன்சேகா, குமார வெல்கம, ராஜித சேனாரட்ன போன்ற கட்சியின் சில உறுப்பினர்கள் அவையில் அமர்ந்திருந்து ஜனாதிபதியின் உரையை செவிமடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தெண்டாயுதபாணி உற்சவம்





பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
