ஜனாதிபதி - சரத் பொன்சேகா இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (07.02.2024) இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சுமார் இருபது நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி வெளிநடப்பு
இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் ஜனாதிபதி உரையாற்றிய போது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அவையை விட்டு வெளிநடப்பு செய்திருந்தனர்.
எனினும் சரத் பொன்சேகா, குமார வெல்கம, ராஜித சேனாரட்ன போன்ற கட்சியின் சில உறுப்பினர்கள் அவையில் அமர்ந்திருந்து ஜனாதிபதியின் உரையை செவிமடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 8 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri