லண்டனுக்கு பறக்கும் ரணில்: உலகத் தலைவர்களுடன் பேச்சு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டனுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
நாளைய தினம் (04.05.2023) புறப்படும், ஜனாதிபதி ரணில், எதிர்வரும் சனிக்கிழமை லண்டன் - வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறவுள்ள சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்.
லண்டனின் புராதனமான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
உலகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை
1953ஆம் ஆண்டு, மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் கலந்துகொண்ட சுமார் 8 ஆயிரத்து 200 பேரிலிருந்தும் இம்முறை கலந்துகொள்வோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 2 ஆயிரத்து 200 பேருக்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒருவராக உள்ளார்.
நிகழ்வில் போது உலகத் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தையும் நடத்தவுள்ளதையும் குறிப்பிடத்தக்கது.

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
