அரசாங்கம் வகுத்த கொள்கைகள்: ரணிலின் பதில்
தற்போதைய அரசாங்கம் தான் வகுத்த கொள்கைகளையே பின்பற்றுகிறதா என்ற கேள்விக்கு, அதற்குரிய பதிலை அரசாங்கத்தில் இருப்பவர்களிடமே கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(04.10.2025) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
தாம் வகுத்த கொள்கைகளையே தற்போதைய அரசாங்கம் தொடர்கிறதா எனப் பலர் தம்மிடம் கேட்பதாகக் குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, "இந்தக் கேள்வியை அரசாங்கத்திடம் தான் கேட்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

அரசியல் சூழ்நிலை
மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழ்நிலை "சிறந்ததா அல்லது இல்லையா" என்பது குறித்தும் அரசாங்கத்திடமே கேட்க வேண்டும் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஷ்யாவிற்காக வேறு நாட்டில் நாசவேலையில் இறங்கிய உக்ரேனியர்கள்: பகிரங்கப்படுத்திய பிரதமர் News Lankasri