தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார் ரணில்: சஜித் குற்றச்சாட்டு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார். அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு தரமாட்டார்" என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தமிழ்க் கட்சிகளின் எம்.பிக்கள் நடத்திய சந்திப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்துரைக்கையில், "ராஜபக்சக்கள் போல் ரணில் விக்ரமசிங்கவும் தமிழர்களை ஏமாற்றுகின்றார். அவரை நம்பி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பேச்சுக்குச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை.
பயனில்லாத விடயம்
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில்தான் தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை, இந்த நாட்டின் மக்கள் ஒருமித்தால் விரும்பும் தீர்வைப் பெற முடியும்.
எனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியை நிறுவுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்." - எனவும் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |