ஒலிம்பிக்கில் ஓடியது போன்று ஓடிய சஜித் : கிண்டலடித்த ரணில்
நாடு பாரிய பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியிருந்த போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒலிம்பிக்கில் ஓடியது போன்று ஓடியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் உள்ள சல்காடு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“நாட்டு மக்களின் எதிர்காலத்துக்காகவும் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காகவுமே நான் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றேன்.
தப்பித்து ஓடிய தலைவர்கள்
மின்சாரம், பெற்றோலியம் மற்றும் மருந்துகள் இல்லாத காலத்தை மறந்து விடாதீர்கள். அப்போது எரிவாயு சிலிண்டருக்கும் தட்டுப்பாடு நிலவியது. இருந்த சிலிண்டர்களும் வெடித்தன.
இவ்வாறானதொரு காலத்தில் தான் நானும் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் இந்த நாட்டை பொறுப்பெடுத்தோம். அப்போது, மற்றைய கட்சித் தலைவர்கள் தப்பித்து ஓடினார்கள்.
அப்போது ஜனாதிபதி மற்றும் பிரதமராக இருந்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்கள். சஜித் ஒலிம்பிக்கில் ஓடியது போன்று ஓடினார். அனுரவை கண்டுபிடிக்க முடியாமல் போனது.
துன்பகரமான காலம்
அன்று டொலர் ஒன்றின் பெறுமதி 377 ரூபாவாகவும் லிட்ரோ சிலிண்டரின் விலை 4,091 ரூபாவாகவும் லாஃப்ஸ் சிலிண்டரின் விலை 6,850 ரூபாவாகவும் ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை 470 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் விலை 375 ரூபாவாகவும் காணப்பட்டன.
இவ்வாறானதொரு துன்பகரமான காலத்தில் சஜித் மற்றும் அனுர எங்கே இருந்தனர்” என வினவியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
