ரணில் விடுத்துள்ள அவசர கோரிக்கை
நாட்டின் எதிர்க்கட்சிகள் இந்த நேரத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக போராட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சில முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் இந்த கோரிக்கயை முன்வைத்துள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மூத்த அரசியல்வாதிகள் அவரை சந்தித்தபோது அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீரிழப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வருவதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தொடர்ந்து இருப்பதாகக் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஓருவர் தெரிவித்துள்ளார்.
விக்ரமசிங்கேவின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதால், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் நாளை கொழும்பில் ஒன்றுகூட உள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam