ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒவ்வொரு பிரதேச செயலகப் பகுதிக்கும் 100 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில், அபிவிருத்திப்பணிகளை துரிதப்படுத்துமாறு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றும் செயற்பாடுகள் தாமதமாகி வருவதால், இது குறித்து ஆலோசிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கடந்த வியாழக்கிழமையன்று சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்ட நிதி
முன்னதாக, ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்கள் போன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள கிராம அபிவிருத்திக் குழுக்களின் முன்மொழிவுகளின் அடிப்படையில் இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அத்துடன், 2024 பாதீட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் ஆரம்ப கட்டத்துக்காக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
