பிரதமருக்கான கடமைகளை பொறுப்பேற்றார் ரணில் (Photos)
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை தனது கடமைகளை பிரதமர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
நேற்றைய தினம் இலங்கையின் 26 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க, நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பிரதமராக நேற்று மாலை பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் பிரதமராக தனது கடமைகளை ஆரம்பித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை 6.34 மணியளவில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையின் பிரதமராக அவர் பதவியேற்பது இது ஆறாவது முறையாகும்.
ரணில் இன்று பிரதமர் அலுவலகத்தில் கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் ஆகியோர் தனித்தனியாக அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதன்போது"நாட்டின் நிலைமை மோசமடைவதற்கு முன்னர் பிரதமர் பதவியை நான் பொறுப்பேற்றுள்ளேன். வெளிநாடுகள் இலங்கைக்குத் தொடர்ந்தும் நிதி உதவிகளை வழங்கவேண்டும்; இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும்" என்றும் இதன்போது ரணில் கோரிக்கை விடுத்துள்ளார்.


ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam